Wednesday, February 22, 2012

ஈரான் போர் ஒத்திகை? இஸ்ரேல் ஜனாதிபதி , ஒபாமா விரைவில் சந்திப்பு.


ஈரானில் அணுசக்தித் திட்டங்களை ஆராய சர்வதேச அணுசக்தி
ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு இரண்டாவது முறையாக ஈரானுக்குச் சென்ற நிலையில் தற்போது அணு சக்தி திட்டங்கள் குறித்த ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதான்யாகுவை அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசவுள்ளார்.

எனினும் ஈரான் விமான பாதுகாப்பு படை ஒத்திகை நடத்த தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல் அணு சக்தி நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிக்க பொதுமக்களுக்கு அணுசக்தி நிலையங்களுக்குமான அச்சுறுத்தல்களை முறியடிக்கும் முகமாக தென் ஈரானில் பெருமளவில் இராணுவ பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது ஈரான்.


பயிற்சியில் ஈடுபடும் ஈரானிய இராணுவத்தினர் - வீடியோ


ஈரானிய இராணுவத்தினர் பயிற்சிகளில் ஈடுபடுகின்றமையை
அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்தது.

அவற்றின் இணைப்பு இங்கே

சுட்டு வீழ்த்திய அமெரிக்க உளவு விமானத்தின் வீடியோவை வெளியிட்டது ஈரான்.



அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமொன்று கிழக்கு ஈரானின் புரட்சிப்படை இராணுவத்தினரால், RQ- 170 எனும் குறித்த அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரபு மொழி தொலைக்காட்சி தெரிவித்திருந்தது.
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமொன்று ஈரான் இராணுவத்தினரால் சுட்டு
வீழ்த்தப்பட்டிருப்பதாக ஈரான் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஈரானின் புரட்சிப்படை இராணுவத்தினரால், RQ- 170 எனும் குறித்த அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரபு மொழி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஈரானிய வான்வெளியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குறித்த அமெரிக்க விமானம் பறந்ததாகவும், இது உளவு பார்ப்பதற்காக நாட்டுக்குள் வந்திருக்கலாம் எனவும் ஈரானிய இராணுவ தகவல்கள் தெரிவித்துள்ளன. சுட்டுவீழ்த்தப்பட்ட குறித்த விமானம் சேதங்களுடன், ஈரான் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.  இதேவேளை கடந்த ஜூலை மாதமும் அமெரிக்க வேவு விமானம் ஒன்றை தாம் சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக அணு ஆயுத உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தியிருந்த இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளடங்களான வல்லாதிக்க நாடுகள் ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வந்தன.
ஈரான் ஆணு ஆயுதத் தயாரிப்பில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாக சர்வதேச அணு சக்தி அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

 இந்நிலையில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டித்து இங்கிலாந்து தனது நாட்டிலிருந்து ஈரானிய உயரதிகாரிகளை வெளியேற்றிருந்தது.

அதே போன்று கடந்த புதன்கிழமை தெஹ்ரானில் உள்ள தூதரக அதிகாரிகளை ஜெர்மனி தனது தாய்நாட்டிற்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்தது. தமது நாட்டில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜேர்மனியின் புலனாய்வு தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அமெரிக்க வேவுவிமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும் இவற்றை பென்டகன் மறுத்திருந்த நிலையில் தற்போது பிடிபட்ட உளவு விமானத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ஈரான்.


இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets