Friday, September 28, 2012

இஸ்லாமியர்களுக்கு எதிராக திரைப்படம் தயாரித்தவர் கைது


இஸ்லாமியர்களுக்கு எதிராக திரைப்படம் தயாரித்தவர் கைது



அமெரிக்காவில் இருந்து வெளியிடப்பட்ட திரைப்படம் நபிகள் நாயகத்தை அவமதிப்பதாக உள்ளது என்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
 
மேலும் இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை வெளியிட்ட அமெரிக்காவைக் கண்டித்து இந்தியா, லிபியா, பாகிஸ்தான், எகிப்து போன்ற பல நாடுகளில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன.
 
இதற்கிடையே இந்த திரைப்படத்தை தயாரித்தவரை கொல்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலரை நான் பரிசாகத் தருவேன் என்று பாகிஸ்தான் மந்திரிகுலாம்அகமது பிலோர் அறிவித்தார். அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்ததால், சர்ச்சைக்குரிய படத்தை தயாரித்தவரை போலீசார் தேடி வந்தனர்.
 
இந்நிலையில் அந்த படத்தை தயாரித்த நகோலா(55) என்பவரை கலிபோர்னியா போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை.
 
இதற்கு முன் நகோலா தனது பெயரை பலமுறை மாற்றி, பல்வேறு பெயர்களில் கிரெடிட் கார்டுகள் பெற்று முறைகேடு செய்துள்ளார். போலியான வங்கிக் கணக்கு தொடங்கி பல்லாயிரக்கணக்கான டாலர் கடன் பெற்றுள்ளார். இதுதொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நகோலா, 2011ல் விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது

ப்ரேசில் நாட்டு Google தலைவருக்கு பிடி வாரண்ட், ஈரானில் Gmail க்கு தடை!, கொட்டு வாங்க ஆரம்பித்த கூகுள்!

ப்ரேசில் நாட்டு Google தலைவருக்கு பிடி வாரண்ட், ஈரானில் Gmail க்கு தடை!, கொட்டு வாங்க ஆரம்பித்த கூகுள்! 

பிடி வாரண்ட பிறப்பிக்க பட்ட Google உயர் அதிகாரி Fabio Jose Silva Coelho
ஈரான் நாட்டு தொலை தொடர்பு துறை அமைச்சர் Reza Taqipour
நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை நீக்காமல் வைத்துள்ள Yotube க்கு ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.  10 நாட்களுக்குள் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை  Youtube ல் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
10 நாட்களுக்கு பிறகும் அந்த வீடியோ Youtube ல் இருந்தால் அந்த வீடியோ இருக்கும்  ஒவ்வொரு நாளைக்கும் Google நிறுவனம் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் வழங்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
National Islamic Union என்ற இஸ்லாமிய அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதே போன்று தேர்தல் தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய வீடியோவைநீக்குமாறு ப்ரேசில் நாட்டு தேர்தல் நீதிமன்றம் சமீபத்தில் Google க்கு உத்தரவிட்டது, ஆனால் வழக்கம் போல இது பேச்சு சுதந்திரம் எனக் கூறி Youtube நீக்க மறுத்து விட்டது. ஒபாமா கி்ட்டதான் இந்த மாறி பேச்சுல்லாம் செல்லும் , ஆனால் ப்ரேசில் நாட்டு  நீதிமன்றம் ஆத்திரமடைந்து சமீபத்தில் ப்ரேசில் நாட்டு Google நிறுவனத்தின் தலைவருக்கு (Head of Google operation in Brazil) பிடி வாரண்ட் பிறப்பித்தது உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து புதன் கிழமை (26-9-2012) ப்ரேசில் நாட்டு Google நிறுவனத்தின் தலைவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ”நான் வழக்கிற்கு முழுவதுமாக ஒத்துழைக்கின்றேன் நீதிமன்றத்தில் ஆஜராகின்றேன் என அவர் எழுத்துபூர்வமாக அவர் எழுதி கொடுத்ததை தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.
இதே போன்று ஈரான் நாட்டு அரசு  தற்போது Gmail க்கு ஈரான் நாட்டில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஈரான் நாட்டு தொலை தொடர்பு துறை அமைச்சர் , நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து Google நிறுவனத்தில் Gmail சேவை ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது மேலும் மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் எனக் தெரிவித்துள்ளார்.

Monday, September 24, 2012

முகமது நபிகளை இழிவுப்படுத்தி சினிமா தயாரித்த அமெரிக்கர் தலைக்கு ரூ.55 லட்சம் பரிசு: பாகிஸ்தான் மந்திரி அறிவிப்பு

முகமதுநபிகளை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் “இன்னோ சென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதற்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன. 

பாகிஸ்தானில் போராட்டம் வலுவடைந்து உள்ளது. அதில், இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் சினிமா படம் தயாரித்த அமெரிக்கர் தலைக்கு பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி குலாம் அகமது பிலோர் ரூ.55 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார். பெஷாவரில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 




முகமது நபிகளை இழிவு படுத்தி சினிமா படம் தயாரித்து வெளியிட்ட அமெரிக்கருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக அவரை கொல்பவருக்கு ரூ.55 லட்சம் (1 லட்சம் அமெரிக்க டாலர்) பரிசு தொகை வழங்கப்படும். மதத்தை அவமதிப்பவருக்கு இதுதான் சரியான தண்டனையாகும். பொது மக்கள் தவிர பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தலிபான் மற்றும் அல்- கொய்தா தீவிரவாதிகள் அவரை கொலை செய்தால் கூட அவர்களுக்கும் இந்த பரிசு தொகை பொருந்தும் என்று தெரிவித்தார். 

மேலும் அவர் கூறும் போது, ஒருவரை கொலை செய்யும்படி பொது மக்களை தூண்டி விடுவது கிரிமினல் குற்றம் என எனக்கு தெரியும். அதுகுறித்து பாகிஸ்தான் மற்றும் சர்வதேச கோர்ட்டில் என்மீது வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் இதுபோன்ற விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றார்.

இதற்கிடையே மந்திரி பிலோரின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கர் தலைக்கு பரிசு தொகை அறிவித்துள்ள மந்திரி குலாம்அகமது பிலோர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டணி கட்சியான அவாமி தேசிய கட்சியை சேர்ந்தவர். இக்கட்சி கைபர்- பக்துன்கவா மாகாணத்தில் செல்வாக்குடன் திகழ்கிறது.

சீன ராணுவத்தில் முதல் விமானம் தாங்கி கப்பல்


சீனா ராணுவம் உலகில் வலிமையான ராணுவமாக இருந்தாலும், இதுவரை சீனாவிடம் விமானம் தாங்கி கப்பல் இல்லாமல் இருந்தது. அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவுக்கு ராணுவத்தை வளர்த்து வரும் சீனா இப்போது முதன் முதலாக ராணுவத்தில் விமானந்தாங்கி கப்பலை சேர்த்துள்ளது. 


இந்த கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானதாகும். ரஷியா 1991-ம் ஆண்டு உடைந்தபோது அந்த கப்பல் உக்ரைனுக்கு சொந்தமானது. 2002-ம் ஆண்டு அந்த கப்பலை சீனா விலைக்கு வாங்கி புதுப்பித்தது. 

சீனாவில் உள்ள டேலியன் கப்பல் கட்டும் துறையில் பல ஆண்டுகளாக புதுப்பிப்பு பணி நடந்து முடிந்து, இப்போது சீன கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 

கப்பலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பணிக்காக பயன்படுத்த போவதாக சீனா கூறியுள்ளது. ஆனால் சீனா சமீபகாலமாக பக்கத்து நாடுகளான ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்சுடன் கடற் நிலபரப்பு தொடர்பாக மோதல் போக்கை கடைப் பிடித்து வருகிறது. எனவே இந்த கடல் பகுதியில் கண்காணிப்பதற்காகவும் அந்த நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும் கப்பலை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கப்பல் 990 அடி நீளம் கொண்டதாகும். 36 விமானங்கள், 16 ஹெலிகாப்டர்களை இதில் நிறுத்தி வைக்கலாம். 3 ஆயிரம் வீரர்கள் கப்பலில் தங்கியிருக்கும் வசதி உள்ளது. ரஷியாவிடம் இந்த கப்பல் இருந்தபோது வர்யாக் என்று பெயரிடப்பட்டு இருந்தது. சீனா இதற்கு ஷிலேங் என்று பெயரிட்டு உள்ளது.

Monday, September 17, 2012

சவூதியில் பஸ்- லொறி மோதி தீப்பிடித்தது: இந்தியர்கள் உள்பட 35 பேர் பலி


துபாயின் ஜூபைல் மாகாணத்தில் இன்று பேருந்தும்,ஆயில் டேங்கர் லாரியும் நேருக்குநேர் மோதி தீப்பிடித்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 35 பேர் இறந்தனர்.


சவூதியில் கேரளாவைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான நாசல் அல் ஹாஜிரி என்ற நிறுவனம் உள்ளது. இங்கு இந்தியாநேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் சென்று வர கம்பெனி சார்பில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இன்று பணி முடிந்து தொழிலாளர்கள் அந்த பேருந்தில் வீடு திரும்பினர். ஜூபைல் நகருக்கு அருகில் சென்றபோது  அந்த பேருந்துஆயில் டேங்கர் லாரியில் மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்தன. பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் பலர் தீயில் கருகினர்.


இவர்களில் 10 இந்தியர்கள் உள்பட 35 பேர் உடல் கருகி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும்12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Monday, May 21, 2012

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, மற்றும் துபாய் ?வெளிநாட்டு வாழ்வு


இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை. 
 
எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில்

சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.

அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை

வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.

90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான் நிறைய விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க முடியாது.

சரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?
30, 35 வருஷமாக சவூதியில் இருந்து சம்பாதித்து சந்தோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப் பாருங்கள்? இரண்டு குமரிகளைக் கட்டி கொடுத்தேன்,

பசங்களை 10 வது படிக்க வச்சு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன், வீடு கட்டினேன் என்று கேள்வியைத் திசைத்திருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால வாழ்க்கை, மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை  கட்டிக் கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி உயர்வு. 70 80களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.

80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில் 1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால் எதோ மிச்சம் பிடித்து வீடு கட்ட முடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும் செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும் சரியாக இருக்கிறது.

இதை விட பாவப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.

2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500 ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன?
ஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை சம்பளம்கூட உயர்கிறது. உதாரணத்திற்கு 2002 ல் நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது 2500 ரூபாய் சம்பளம்.

என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம் பிடிப்பார். இப்போது அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலேயே கிடைக்கிறது. அந்த 8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

ஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக வளைகுடா நாடுகளில் சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால் சம்பளம்தான் 500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?
சவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.

 


இவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம். வேலை இந்த மாடியின் எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின் தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.


 


இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஃபாஸ்ட்ஃபுட் சான்ட்வீச் கடையில் வேலை. சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள் வேலை. சம்பளம் 800


 


இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில் வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200 ரியால்


 



இவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற அரபு நாட்டு வெயிலில் ரோடு போடும் வேலை.

சம்பளம் 1000 ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் போடும்போது அருகில் நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று காரணமாக வியர்வை வராமல் வியாதி வர வாய்ப்பு இருப்பவர்கள் மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு கிடைக்கும்.
இறுதியாக

இப்போதும் 10th, 12th படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இதுபோன்ற கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள். உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள். அப்படி வருவதாக இருந்தால் சரியான முறையில் படித்து அதற்கேற்ற வேலைக்கு வாருங்கள். இப்படி வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து வரலாம். கடைநிலை வேலை செய்யும் லேபர்களுக்கு குடும்பத்தை அழைத்துவர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

Wednesday, April 11, 2012

சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம்: 5 மணிக்கு சுனாமி வரலாம் என எச்சரிக்கை


சென்னை, ஏப். 11 -
 
சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சென்னையிலுள்ள சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம், மைலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
 
இந்த நிலநடுக்கம் மிதமான அளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலநடுக்கம் 20 வினாடிகள் நீடித்தது. நிலநடுக்கத்தை உணர்ந்த சென்னை வாசிகள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு சாலைகளில் குவிந்தனர்.
 
தலைமைச்செயலகம்,  உயர்நீதிமன்றம்  உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் இருந்தோர்  அனைவரும் உடனடியாக சாலையில் கூடினர். நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னை பகுதியில் உள்ள மொபைல் நெட்வொர்க்குகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து  இந்தோனேஷியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சுனாமி வரலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன

Monday, March 12, 2012

இனங்கான முடியாத டிசோடருள்ள ஆச்சரியமான மனிதர்! - (வீடியோ+ படங்கள் + விளக்கம்)



ஜோசப் காரே மெரிக், 1862 ஆம் ஆண்டு தொடக்கம் 1890 ஆம் ஆண்டுவரை வாழ்த ஒரு அபூர்வமனிதர்!
அவரைப்பற்றிய சில சுவார்ஷ்யமான தகவல்களையே இன்று தமிழ்குளோனில் பார்க்கப்போகிறீர்கள்.
 
இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பிறந்த மெரிக் பிறந்து சில வருடங்களிலேயே அசாதரண மனிதனாக உருவாகத்தொடங்கினார். அவரின் தோல் யானை போன்று தடிமனாகத்தொடங்கியதுடன் முடிச்சுக்களும் உருவாகத்தொடங்கியது. மேலும் மருத்துவ உலகிற்கு சவால் விடும் விதமாக அவரின் நெற்றியில் பாரிய எலும்பு வளரத்ட்தொடங்கியதுடன் அவரின் கால்களும் வழமைக்கு மாறாக வித்தியாசமாக வளர்ந்தது.
அதன் விளைவு, நடக்கும் போது விழுந்த அவரின் இடுப்பெலும்பு நிரந்தரமாக வழைந்துபோனது.
 
இவ்வாறாக வழமைக்கு மாறாக வழர்ந்த மெரிக்கின் 11 வயதில் அவரின் தாயார் மரணமடைந்தார். அதன் பின் அவரின் தந்தை மறுமணம் செய்துகொள்ள, தந்தையாலும் புதிய தாயாலும் ஒதுக்கப்பட்டார். 12 வயதில் பாடசாலையால் விலக்கப்பட்ட அவர் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.
 
வேலைகளைப்பெற்றுக்கொள்வதில் உருவத்தால் பல தடங்களை சந்தித்த அவர் இறுதியாக இலண்டன் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் தங்கவைக்கப்பட்டார். இவரின் வினோத உடலமைப்பை பற்றி அறிந்த லண்டன் மகாராணியின் கவணம் அவர் பக்கம் திரும்ப அவரின் வாழ்வு பொருளாதார ரீதியில் வளம்பெற்றது.
 
இறுதியாக படுக்கையில் இருக்கும் போதே கழுத்து முறிந்து இறந்துபோனார். இன்றுவரை இவரின் இவ் எதிர்பாரா உடலமைப்பிற்கான காரணமும் அவரின் இறப்பிற்கான சரியான காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தலையில் வழர்ந்த பாரிய எலும்புக்கட்டியால் ஏற்பட்ட பாரத்தின் காரணமாக, திடீரென தூக்கத்தால் விளித்தெழும் போது இறந்திருப்பார் என ஊகிக்கப்படுகிறது. ( இது போன்ற விசேட மனிதர்களை பற்றி அறிந்து கொள்ள கிங்டொம் ஆஃப் கீழக்கரையுடன் இணைந்திருங்கள். )

Sunday, March 11, 2012

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல் Read more about ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல்


அமெரிக்க சிப்பாய் ஒருவர் காந்தஹாரில் வீடுகளினுள் நுழைந்து 15 பேரைக் கொன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் இன்று ( 11.03.2012) காலையில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு வீடாகப் புகுந்து சராமாரியாக அந்த சிப்பாய் சுட்டதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் குழந்தைகள் ஆவர்.

படுகொலையை நடத்திய சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தினை கண்டித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லியோன் பனெட்டா,  தான் வேதனையடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ மையத்தில் குர்ஆன் எரிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. அமெரிக்க ராணுவத்திற்கும் ஆப்கான் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை நிலவுகிறது



football நகைச்சுவை (வீடியோ)





 Fooball matchஇல் நடந்த நகைச்சுவை சம்பவங்கள் :p

Saturday, February 25, 2012

போலியோ நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டது


போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் இந்தியா ஆர்வம் காட்டியது பலன் தந்துள்ளது.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் இந்தியா ஆர்வம் காட்டியது பலன் தந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தால்தான் உண்டு என்றில்லாமல் உள்நாட்டிலேயே போலியோநோய் (இளம்பிள்ளை வாதம்) உள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை உலக சுகாதார நிறுவனம் நீக்கிவிட்டதாக அந்நாடு கூறுகிறது.
போலியொ ஒழிப்பு தொடர்பில் கடந்த ஆண்டில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றத்தை இது பிரதிபலிப்பதாக இந்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆஸாத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலேயே போலியோ நோய் உள்ள நாடுகளின் பட்டியலில் எஞ்சியுள்ள உலக நாடுகள் என்றால், இனி அது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய மூன்று நாடுகள் மட்டும்தான்.
அடுத்த இரண்டு வருடங்களில் இந்தியாவில் எவருக்குமே புதிதாக போலியோ வராமல் இருந்தால், இந்தியாவை முற்றிலும் போலியோ ஒழிக்கப்பட்ட ஒரு நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும்.

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில் கடும் வறட்சியால் 50 லட்சம் பேர் பட்டினி: நகரபகுதிக்கு சென்று பிச்சை எடுக்கும் அவலம்


ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில்
கடும் வறட்சியால் 50 லட்சம் பேர் பட்டினி: நகரபகுதிக்கு சென்று பிச்சை எடுக்கும் அவலம்
நைஜர்,
ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடு நைஜர். இங்கு அடிக்கடி வறட்சி ஏற்படுவதும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவதும் வாடிக்கையாக உள்ளது.   இப்போது மீண்டும் அங்கு கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக நைஜர் நாட்டில் அக்டோபர் மாதம் அறுவடை நடக்கும். கடந்த ஆண்டு போதுமான மழை பெய்யாததால் சரியான விளைச்சல் இல்லை. மேலும் வெட்டுக்கிளி தாக்குதலாலும் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
 
 எனவே மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. உணவு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் உணவு கிடைக்காமல். 50 லட்சம் பேர் பட்டினி கிடக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒரு நாளைக்கு ஒரு தடவை அல்லது 2 நாளைக்கு ஒரு தடவை தான் சாப்பிடுவதாக கூறுகின்றனர்.
 
 கிராம பகுதிகளில் உணவு கிடைக்காத மக்கள் நகரங்களுக்கு சென்று பிச்சை எடுத்து சாப்பிடுகின்றனர். குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்காமல் பல குழந்தைகள் நோயால் அவதிப்படுகின்றன. நிலைமை மோசமாக இருப்பதை அடுத்து ஐ.நா குழு ஒன்று அவசரமாக நைஜர் நாட்டுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறது.
 
உடனடியாக நிலைமையை சமாளிக்க ரூ 4 ஆயிரம் கோடி தேவை என்று ஐ.நா கூறியிருக்கிறது. எனவே சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. நைஜர் நாட்டில் கடந்த 10 ஆண்டில் கடும் பட்டினி ஏற்பட்டு இருப்பது இது 3-வது தடவையாகும்.

Friday, February 24, 2012

தந்தங்களுக்காக கேமரூனில் 458 யானைகள் கொலை


கேமரூன் நாட்டின் வடபகுதியில் இதுவரை இல்லாத வகையில் தந்தங்களுக்காக, கடந்த சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான யானைகளை துப்பாக்கிதாரிகள் கொன்றுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் எண்ணியிருந்ததை விட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைய வாரங்களில் மட்டும் 458 யானைகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்குள்ள பௌபா இன்ஜெடா தேசிய வன்விலங்கு சரணாலயத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தந்தங்களுக்காக மத்திய ஆப்ரிகாவில் யானைகள் கொல்லப்படுவது சாதாரமான ஒரு விஷயம்தான். ஆனால் இவ்வளவு குறுகிய காலப்பகுதியில் இந்த அளவுக்கு யானைகள் கொல்லப்படுவதை தாங்கள் இதுவரை பார்த்தது இல்லை என்று பிராணிகள் நல அமைப்பினர் தெரிவிக்கிறார்கள்.
தற்போது கேமரூனின் வடபகுதியில் வறண்ட வாநிலை நிலவும் காலம் என்பதால், வேட்டைக்காரர்களுக்கு யானைகளை கொல்வதற்கு சரியான நேரமாக அமைந்துள்ளது.
மேலும் அண்டை நாடுகளில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைந்துள்ளதால், வேட்டைக்காரர்களின் கவனம் கேமரூன் நாட்டிலுள்ள இந்த இன்ஜெடா சரணாலயத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
இதற்கு சூடான் மற்றும் சாட் நாட்டிலுள்ள குற்றக்குழுக்கள் மீதே பிராணிகள் நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். சர்வதேச பிராணிகள் நலச் சங்கத்தின் பேச்சாளரான சிசிலர் பியேன்வெனு இந்தக் குழுக்கள் மிகவும் சிறப்பாக ஒருங்கிணைப்புடன் பெருமளவில் அதிநவீன ஆயுதங்களுடன் செயல்படுகிறார்கள் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
இவர்கள் குதிரைகளில் வந்து சிறு குழுக்களாக பிரிந்து யானைகளை வேட்டையாடிவிட்டு விரைவாக சென்று விடுகிறார்கள் என்றும் சிசிலர் பியேன்வெனு கூறுகிறார்
குட்டியானைகள் உட்பட தற்போது 458 யானைகளின் சடலங்களை தாங்கள் கண்டுபிடித்திருந்தாலும், யானைகள் உலாவும் பகுதி மிகப் பெரிய அளவிலானது என்பதால், மேலும் கூடுதலான யானைகள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனவும் கேமரூன் நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கேமரூனின் வடபகுதி முழுவதிலும் ஆயிரத்துக்கும் குறைவான யானைகளே இருப்பதாக கருத்தப்படும் நிலையில், இந்தப் பகுதியில் உள்ள யானைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
கிழக்கு ஆசியாவில் அதிலும் குறிப்பாக சீனாவில் யானைத் தந்தங்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளதற்கும், கேமரூனில் யானைகள் கொல்லப்படுவதற்கும் நேரடி தொடர்பு உள்ளது என்று பிராணிகள் நல ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

ஆப்கான் மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார்


குரான் எரிப்பைக் கண்டித்து தொடரும் போராட்டங்கள்
குரான் எரிப்பைக் கண்டித்து தொடரும் போராட்டங்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டதற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.
அந்த எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டங்களில் இன்று இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நங்காஹர் மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க-ஆப்கானிய இராணுவத் தளத்தை போராட்டக்காரர்கள் தாக்கிய போது, ஆப்கானிய இராணுவ உடையில் இருந்த ஒருவரால் இந்த இரண்டு அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்தப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்துமாறு உள்ளுர் பள்ளிவாசல் ஒன்று அழைப்பு விடுத்தது என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏழு மாகாணங்களில் குரான் எரிப்பு தொடர்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதிகளில் இதுவரை குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

சாக்லேட் சாப்பிட்டதால் 3 மணி நேரம் ஓட வைத்து தண்டிக்கப்பட்ட சிறுமி சாவு


சாக்லேட் சாப்பிட்டதால் 3 மணி நேரம் ஓட வைத்து தண்டிக்கப்பட்ட சிறுமி சாவு
அலபாமா, 

சாக்லேட் சாப்பிட்டதால் 3 மணி நேரம் ஓட வைத்து தண்டிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக இறந்தார். அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியை சேர்ந்தவள் சவன்னா ஹார்டின். 9 வயது சிறுமி. 3-வது வகுப்பு படித்து வந்தாள்.
 
இவள் தனது சித்தி ஜெசீகாமே ஹார்டின் (27), பாட்டி ஜாய்சி ஹார்டின் காராட் (47) ஆகியோருக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிட்டு விட்டாள். இதை அறிந்த இருவரும் அவளுக்கு கடுமையான தண்டனை கொடுத்தனர்.
 
அதாவது தனது வீட்டை சுற்றி தொடர்ந்து 3 மணி நேரம் ஓடும்படி கட்டாயப் படுத்தினர். அதை இருவரும் உட்கார்ந்தபடி ரசித்து கொண்டிருந்தனர். இதனால் ஓடி களைத்த சவன்னா ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நாக்கு வறட்சியால் திடீரென தனது பாட்டியின் காலடியில் மயங்கி விழுந்தாள்.
 
உடனே அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் பரிதாபமாக இறந்தாள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சவன்னாவின் பாட்டி ஜாய்சீயையும், சித்தி ஜெசீகாமேவையும் கைது செய்தனர்.

பறக்கும் ஆசையில் கால்களை முறித்துக் ​கொண்ட அதிசய மனிதர்


 எனினும் அதில் பெரும்பகுதியினர் இயற்கையின் படைப்பில் அது பறவைகளுக்கே உரிய சிறப்பம்சம் என புரிந்து கொண்டு அந்த ஆசையிலிருந்து ஒதுங்குகின்றார்கள்.
ஆனால் சிலர் எப்படியாவது பறந்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு எச்சரிக்கையாகவே இந்த செய்தி அமைகின்றது.
அமெரிக்காவை சேர்ந்த 35 வயதான ஜெப் கோர்லிஸ் என்பர் இந்த வினோத ஆசையால் சிறகுகள் போன்ற உடை ஒன்றை வடிவமைத்து சுமார் 200 அடிகள் உயரமான மலையிலிருந்து குதித்திருக்கின்றார்.
மேலும் மணித்தியாலத்திற்கு 120 மைல்கள் என்ற வேகத்தில் தரையை நோக்கி வந்த அவரின் இரு கால்களும் முறிவடைந்தமையால் அதே வேகத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Wednesday, February 22, 2012

ஈரானில் கூகுள்,யாஹு போன்ற வெப்சைட்டுக்களை பொதுமக்கள் பார்க்க திடீர் தடை.


Feb
23
 


Iran Government banned Google and Yahoo websites.,

பார்லிமென்ட் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், வெப்சைட்களை
மக்கள் பார்க்க ஈரானில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுள், யாஹூ
உள்ளிட்ட வெப்சைட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஈரானில்
2009-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. 2-வது முறையாக 
முகமது அகமதிநிஜாத் வெற்றி பெற்று அதிபரானார்.
முறைகேடாக தேர்தல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறின. 
4 ஆண்டு பதவிக்காலம் முடிவதை அடுத்து, அங்கு அதிபர் 
தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதற்கிடையில், 
நாட்டில் புரட்சி வெடித்து குடியரசு நாடாக மாறியதன்
33-வது ஆண்டு விழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதை விமரிசையாக கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், 
அதிரடி நடவடிக்கையாக வெப்சைட்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
எச்டிடிபிஎஸ் என தொடங்கும் எல்லா வெப்சைட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. 
கூகுள், யாஹூ மட்டுமின்றி இன்டர்நெட் பேங்கிங் சேவைகூட பெற முடியாமல் 
மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

ஈரான் போர் ஒத்திகை? இஸ்ரேல் ஜனாதிபதி , ஒபாமா விரைவில் சந்திப்பு.


ஈரானில் அணுசக்தித் திட்டங்களை ஆராய சர்வதேச அணுசக்தி
ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு இரண்டாவது முறையாக ஈரானுக்குச் சென்ற நிலையில் தற்போது அணு சக்தி திட்டங்கள் குறித்த ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதான்யாகுவை அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசவுள்ளார்.

எனினும் ஈரான் விமான பாதுகாப்பு படை ஒத்திகை நடத்த தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல் அணு சக்தி நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிக்க பொதுமக்களுக்கு அணுசக்தி நிலையங்களுக்குமான அச்சுறுத்தல்களை முறியடிக்கும் முகமாக தென் ஈரானில் பெருமளவில் இராணுவ பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது ஈரான்.


பயிற்சியில் ஈடுபடும் ஈரானிய இராணுவத்தினர் - வீடியோ


ஈரானிய இராணுவத்தினர் பயிற்சிகளில் ஈடுபடுகின்றமையை
அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்தது.

அவற்றின் இணைப்பு இங்கே

சுட்டு வீழ்த்திய அமெரிக்க உளவு விமானத்தின் வீடியோவை வெளியிட்டது ஈரான்.



அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமொன்று கிழக்கு ஈரானின் புரட்சிப்படை இராணுவத்தினரால், RQ- 170 எனும் குறித்த அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரபு மொழி தொலைக்காட்சி தெரிவித்திருந்தது.
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமொன்று ஈரான் இராணுவத்தினரால் சுட்டு
வீழ்த்தப்பட்டிருப்பதாக ஈரான் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஈரானின் புரட்சிப்படை இராணுவத்தினரால், RQ- 170 எனும் குறித்த அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரபு மொழி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஈரானிய வான்வெளியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குறித்த அமெரிக்க விமானம் பறந்ததாகவும், இது உளவு பார்ப்பதற்காக நாட்டுக்குள் வந்திருக்கலாம் எனவும் ஈரானிய இராணுவ தகவல்கள் தெரிவித்துள்ளன. சுட்டுவீழ்த்தப்பட்ட குறித்த விமானம் சேதங்களுடன், ஈரான் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.  இதேவேளை கடந்த ஜூலை மாதமும் அமெரிக்க வேவு விமானம் ஒன்றை தாம் சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக அணு ஆயுத உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தியிருந்த இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளடங்களான வல்லாதிக்க நாடுகள் ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வந்தன.
ஈரான் ஆணு ஆயுதத் தயாரிப்பில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாக சர்வதேச அணு சக்தி அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

 இந்நிலையில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டித்து இங்கிலாந்து தனது நாட்டிலிருந்து ஈரானிய உயரதிகாரிகளை வெளியேற்றிருந்தது.

அதே போன்று கடந்த புதன்கிழமை தெஹ்ரானில் உள்ள தூதரக அதிகாரிகளை ஜெர்மனி தனது தாய்நாட்டிற்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்தது. தமது நாட்டில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜேர்மனியின் புலனாய்வு தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அமெரிக்க வேவுவிமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும் இவற்றை பென்டகன் மறுத்திருந்த நிலையில் தற்போது பிடிபட்ட உளவு விமானத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ஈரான்.


இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

Blogger Wordpress Gadgets