Saturday, February 25, 2012

போலியோ நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டது


போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் இந்தியா ஆர்வம் காட்டியது பலன் தந்துள்ளது.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் இந்தியா ஆர்வம் காட்டியது பலன் தந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தால்தான் உண்டு என்றில்லாமல் உள்நாட்டிலேயே போலியோநோய் (இளம்பிள்ளை வாதம்) உள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை உலக சுகாதார நிறுவனம் நீக்கிவிட்டதாக அந்நாடு கூறுகிறது.
போலியொ ஒழிப்பு தொடர்பில் கடந்த ஆண்டில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றத்தை இது பிரதிபலிப்பதாக இந்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆஸாத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலேயே போலியோ நோய் உள்ள நாடுகளின் பட்டியலில் எஞ்சியுள்ள உலக நாடுகள் என்றால், இனி அது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய மூன்று நாடுகள் மட்டும்தான்.
அடுத்த இரண்டு வருடங்களில் இந்தியாவில் எவருக்குமே புதிதாக போலியோ வராமல் இருந்தால், இந்தியாவை முற்றிலும் போலியோ ஒழிக்கப்பட்ட ஒரு நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets