Monday, March 12, 2012

இனங்கான முடியாத டிசோடருள்ள ஆச்சரியமான மனிதர்! - (வீடியோ+ படங்கள் + விளக்கம்)



ஜோசப் காரே மெரிக், 1862 ஆம் ஆண்டு தொடக்கம் 1890 ஆம் ஆண்டுவரை வாழ்த ஒரு அபூர்வமனிதர்!
அவரைப்பற்றிய சில சுவார்ஷ்யமான தகவல்களையே இன்று தமிழ்குளோனில் பார்க்கப்போகிறீர்கள்.
 
இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பிறந்த மெரிக் பிறந்து சில வருடங்களிலேயே அசாதரண மனிதனாக உருவாகத்தொடங்கினார். அவரின் தோல் யானை போன்று தடிமனாகத்தொடங்கியதுடன் முடிச்சுக்களும் உருவாகத்தொடங்கியது. மேலும் மருத்துவ உலகிற்கு சவால் விடும் விதமாக அவரின் நெற்றியில் பாரிய எலும்பு வளரத்ட்தொடங்கியதுடன் அவரின் கால்களும் வழமைக்கு மாறாக வித்தியாசமாக வளர்ந்தது.
அதன் விளைவு, நடக்கும் போது விழுந்த அவரின் இடுப்பெலும்பு நிரந்தரமாக வழைந்துபோனது.
 
இவ்வாறாக வழமைக்கு மாறாக வழர்ந்த மெரிக்கின் 11 வயதில் அவரின் தாயார் மரணமடைந்தார். அதன் பின் அவரின் தந்தை மறுமணம் செய்துகொள்ள, தந்தையாலும் புதிய தாயாலும் ஒதுக்கப்பட்டார். 12 வயதில் பாடசாலையால் விலக்கப்பட்ட அவர் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.
 
வேலைகளைப்பெற்றுக்கொள்வதில் உருவத்தால் பல தடங்களை சந்தித்த அவர் இறுதியாக இலண்டன் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் தங்கவைக்கப்பட்டார். இவரின் வினோத உடலமைப்பை பற்றி அறிந்த லண்டன் மகாராணியின் கவணம் அவர் பக்கம் திரும்ப அவரின் வாழ்வு பொருளாதார ரீதியில் வளம்பெற்றது.
 
இறுதியாக படுக்கையில் இருக்கும் போதே கழுத்து முறிந்து இறந்துபோனார். இன்றுவரை இவரின் இவ் எதிர்பாரா உடலமைப்பிற்கான காரணமும் அவரின் இறப்பிற்கான சரியான காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தலையில் வழர்ந்த பாரிய எலும்புக்கட்டியால் ஏற்பட்ட பாரத்தின் காரணமாக, திடீரென தூக்கத்தால் விளித்தெழும் போது இறந்திருப்பார் என ஊகிக்கப்படுகிறது. ( இது போன்ற விசேட மனிதர்களை பற்றி அறிந்து கொள்ள கிங்டொம் ஆஃப் கீழக்கரையுடன் இணைந்திருங்கள். )

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets