Monday, May 21, 2012

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, மற்றும் துபாய் ?வெளிநாட்டு வாழ்வு


இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை. 
 
எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில்

சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.

அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை

வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.

90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான் நிறைய விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க முடியாது.

சரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?
30, 35 வருஷமாக சவூதியில் இருந்து சம்பாதித்து சந்தோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப் பாருங்கள்? இரண்டு குமரிகளைக் கட்டி கொடுத்தேன்,

பசங்களை 10 வது படிக்க வச்சு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன், வீடு கட்டினேன் என்று கேள்வியைத் திசைத்திருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால வாழ்க்கை, மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை  கட்டிக் கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி உயர்வு. 70 80களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.

80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில் 1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால் எதோ மிச்சம் பிடித்து வீடு கட்ட முடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும் செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும் சரியாக இருக்கிறது.

இதை விட பாவப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.

2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500 ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன?
ஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை சம்பளம்கூட உயர்கிறது. உதாரணத்திற்கு 2002 ல் நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது 2500 ரூபாய் சம்பளம்.

என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம் பிடிப்பார். இப்போது அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலேயே கிடைக்கிறது. அந்த 8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

ஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக வளைகுடா நாடுகளில் சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால் சம்பளம்தான் 500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?
சவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.

 


இவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம். வேலை இந்த மாடியின் எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின் தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.


 


இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஃபாஸ்ட்ஃபுட் சான்ட்வீச் கடையில் வேலை. சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள் வேலை. சம்பளம் 800


 


இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில் வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200 ரியால்


 



இவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற அரபு நாட்டு வெயிலில் ரோடு போடும் வேலை.

சம்பளம் 1000 ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் போடும்போது அருகில் நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று காரணமாக வியர்வை வராமல் வியாதி வர வாய்ப்பு இருப்பவர்கள் மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு கிடைக்கும்.
இறுதியாக

இப்போதும் 10th, 12th படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இதுபோன்ற கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள். உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள். அப்படி வருவதாக இருந்தால் சரியான முறையில் படித்து அதற்கேற்ற வேலைக்கு வாருங்கள். இப்படி வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து வரலாம். கடைநிலை வேலை செய்யும் லேபர்களுக்கு குடும்பத்தை அழைத்துவர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

Wednesday, April 11, 2012

சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம்: 5 மணிக்கு சுனாமி வரலாம் என எச்சரிக்கை


சென்னை, ஏப். 11 -
 
சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சென்னையிலுள்ள சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம், மைலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
 
இந்த நிலநடுக்கம் மிதமான அளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலநடுக்கம் 20 வினாடிகள் நீடித்தது. நிலநடுக்கத்தை உணர்ந்த சென்னை வாசிகள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு சாலைகளில் குவிந்தனர்.
 
தலைமைச்செயலகம்,  உயர்நீதிமன்றம்  உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் இருந்தோர்  அனைவரும் உடனடியாக சாலையில் கூடினர். நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னை பகுதியில் உள்ள மொபைல் நெட்வொர்க்குகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து  இந்தோனேஷியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சுனாமி வரலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன

Monday, March 12, 2012

இனங்கான முடியாத டிசோடருள்ள ஆச்சரியமான மனிதர்! - (வீடியோ+ படங்கள் + விளக்கம்)



ஜோசப் காரே மெரிக், 1862 ஆம் ஆண்டு தொடக்கம் 1890 ஆம் ஆண்டுவரை வாழ்த ஒரு அபூர்வமனிதர்!
அவரைப்பற்றிய சில சுவார்ஷ்யமான தகவல்களையே இன்று தமிழ்குளோனில் பார்க்கப்போகிறீர்கள்.
 
இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பிறந்த மெரிக் பிறந்து சில வருடங்களிலேயே அசாதரண மனிதனாக உருவாகத்தொடங்கினார். அவரின் தோல் யானை போன்று தடிமனாகத்தொடங்கியதுடன் முடிச்சுக்களும் உருவாகத்தொடங்கியது. மேலும் மருத்துவ உலகிற்கு சவால் விடும் விதமாக அவரின் நெற்றியில் பாரிய எலும்பு வளரத்ட்தொடங்கியதுடன் அவரின் கால்களும் வழமைக்கு மாறாக வித்தியாசமாக வளர்ந்தது.
அதன் விளைவு, நடக்கும் போது விழுந்த அவரின் இடுப்பெலும்பு நிரந்தரமாக வழைந்துபோனது.
 
இவ்வாறாக வழமைக்கு மாறாக வழர்ந்த மெரிக்கின் 11 வயதில் அவரின் தாயார் மரணமடைந்தார். அதன் பின் அவரின் தந்தை மறுமணம் செய்துகொள்ள, தந்தையாலும் புதிய தாயாலும் ஒதுக்கப்பட்டார். 12 வயதில் பாடசாலையால் விலக்கப்பட்ட அவர் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.
 
வேலைகளைப்பெற்றுக்கொள்வதில் உருவத்தால் பல தடங்களை சந்தித்த அவர் இறுதியாக இலண்டன் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் தங்கவைக்கப்பட்டார். இவரின் வினோத உடலமைப்பை பற்றி அறிந்த லண்டன் மகாராணியின் கவணம் அவர் பக்கம் திரும்ப அவரின் வாழ்வு பொருளாதார ரீதியில் வளம்பெற்றது.
 
இறுதியாக படுக்கையில் இருக்கும் போதே கழுத்து முறிந்து இறந்துபோனார். இன்றுவரை இவரின் இவ் எதிர்பாரா உடலமைப்பிற்கான காரணமும் அவரின் இறப்பிற்கான சரியான காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தலையில் வழர்ந்த பாரிய எலும்புக்கட்டியால் ஏற்பட்ட பாரத்தின் காரணமாக, திடீரென தூக்கத்தால் விளித்தெழும் போது இறந்திருப்பார் என ஊகிக்கப்படுகிறது. ( இது போன்ற விசேட மனிதர்களை பற்றி அறிந்து கொள்ள கிங்டொம் ஆஃப் கீழக்கரையுடன் இணைந்திருங்கள். )

Sunday, March 11, 2012

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல் Read more about ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல்


அமெரிக்க சிப்பாய் ஒருவர் காந்தஹாரில் வீடுகளினுள் நுழைந்து 15 பேரைக் கொன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் இன்று ( 11.03.2012) காலையில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு வீடாகப் புகுந்து சராமாரியாக அந்த சிப்பாய் சுட்டதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் குழந்தைகள் ஆவர்.

படுகொலையை நடத்திய சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தினை கண்டித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லியோன் பனெட்டா,  தான் வேதனையடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ மையத்தில் குர்ஆன் எரிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. அமெரிக்க ராணுவத்திற்கும் ஆப்கான் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை நிலவுகிறது



football நகைச்சுவை (வீடியோ)





 Fooball matchஇல் நடந்த நகைச்சுவை சம்பவங்கள் :p

Saturday, February 25, 2012

போலியோ நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டது


போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் இந்தியா ஆர்வம் காட்டியது பலன் தந்துள்ளது.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் இந்தியா ஆர்வம் காட்டியது பலன் தந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தால்தான் உண்டு என்றில்லாமல் உள்நாட்டிலேயே போலியோநோய் (இளம்பிள்ளை வாதம்) உள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை உலக சுகாதார நிறுவனம் நீக்கிவிட்டதாக அந்நாடு கூறுகிறது.
போலியொ ஒழிப்பு தொடர்பில் கடந்த ஆண்டில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றத்தை இது பிரதிபலிப்பதாக இந்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆஸாத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலேயே போலியோ நோய் உள்ள நாடுகளின் பட்டியலில் எஞ்சியுள்ள உலக நாடுகள் என்றால், இனி அது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய மூன்று நாடுகள் மட்டும்தான்.
அடுத்த இரண்டு வருடங்களில் இந்தியாவில் எவருக்குமே புதிதாக போலியோ வராமல் இருந்தால், இந்தியாவை முற்றிலும் போலியோ ஒழிக்கப்பட்ட ஒரு நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும்.

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில் கடும் வறட்சியால் 50 லட்சம் பேர் பட்டினி: நகரபகுதிக்கு சென்று பிச்சை எடுக்கும் அவலம்


ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில்
கடும் வறட்சியால் 50 லட்சம் பேர் பட்டினி: நகரபகுதிக்கு சென்று பிச்சை எடுக்கும் அவலம்
நைஜர்,
ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடு நைஜர். இங்கு அடிக்கடி வறட்சி ஏற்படுவதும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவதும் வாடிக்கையாக உள்ளது.   இப்போது மீண்டும் அங்கு கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக நைஜர் நாட்டில் அக்டோபர் மாதம் அறுவடை நடக்கும். கடந்த ஆண்டு போதுமான மழை பெய்யாததால் சரியான விளைச்சல் இல்லை. மேலும் வெட்டுக்கிளி தாக்குதலாலும் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
 
 எனவே மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. உணவு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் உணவு கிடைக்காமல். 50 லட்சம் பேர் பட்டினி கிடக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒரு நாளைக்கு ஒரு தடவை அல்லது 2 நாளைக்கு ஒரு தடவை தான் சாப்பிடுவதாக கூறுகின்றனர்.
 
 கிராம பகுதிகளில் உணவு கிடைக்காத மக்கள் நகரங்களுக்கு சென்று பிச்சை எடுத்து சாப்பிடுகின்றனர். குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்காமல் பல குழந்தைகள் நோயால் அவதிப்படுகின்றன. நிலைமை மோசமாக இருப்பதை அடுத்து ஐ.நா குழு ஒன்று அவசரமாக நைஜர் நாட்டுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறது.
 
உடனடியாக நிலைமையை சமாளிக்க ரூ 4 ஆயிரம் கோடி தேவை என்று ஐ.நா கூறியிருக்கிறது. எனவே சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. நைஜர் நாட்டில் கடந்த 10 ஆண்டில் கடும் பட்டினி ஏற்பட்டு இருப்பது இது 3-வது தடவையாகும்.
Blogger Wordpress Gadgets